க.குமரன்

வியாழன். கவி
ஆக்கம். 87

சித்திரை மகளே

சித்திரை மகளே
சீற்றம் ஏனே!
இத்தரை மேலே
கோபம் தானோ!

உனதான மக்கள்
உயிர் சேதமின்றி
உய்க்க செய்ய
ஒரு வழி காணதும் ஏனோ?

நோய் கொண்டு
மாய்ந்தவர்
எண்ணியடங்கா
எண்ணிக்கையானதே!

எதிர் யுத்தம்
எங்கு பரவ
எச்சரிக்கை
காட்டிடுதே!

பசி பஞ்சம்
பட்டினிகள்
பாரினிலே
பாராமுகமாய்
நிற்கின்றாயே!!!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading