20
Nov
ஆத்மராகங்கள்
சக்தி சிறினிசங்கர்
தமிழ்மணம் கமழும் தேசத்தை
நேசித்த நெஞ்சங்களில்
சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில்
துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க
மறந்தனர்...
சந்தம் சிந்தும் சந்திப்பு 286
காற்று
அது காதோரம்
எனக்கொரு
கதை பேசியதோ ?
நேற்று
நினைவாகத் தவழ்ந்து
இன்று கனவாக மிதந்த கதை
சொல்லிப் போயிற்றோ ?
வேற்று
உணர்வோடு கலந்து
மீட்டி செவியோடு இணைந்து
கடந்து போனதொரு கணமோ ?
போற்றி
பூத்ததந்த உறவதுவும்
பூட்டிய மனக்கதவை யுடைத்து
பறந்த கதை பரவியதோ ?
சேற்று
நிலமதில் விளைந்த
செந்தாமரையின் வனப்பை
ரசிக்க மறந்த அதன் விளைவோ ?
மாற்று
மனதின் இயல்பை என
காட்டி இயற்கையது புகட்டியதைத்
தெரிந்து கொள்ளும் கணமோ ?
சக்தி சக்திதாசன்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.