மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

சக்தி சக்திதாசன்

கண்களின் முன்னால் விரிந்திடும்
காட்சியின் மகிமை கண்டே
கவிதை வரிகள் குதித்திடும்
கணத்தில் வரிகளாய் பதிந்திடும்

வீசிடும் கதிர்களால் என்னை
விரைந்தே அணைத்திடும் ஆதவன்
மூடிடும் இருளால் பகலைப் போர்த்திடும்
மாலை எனைப் பலமாய் ஈர்த்திடும்

கூவிடும் குரலால் இன்னிசை இசைத்திடும்
குயிலதன் ஓசைகள் ஒலித்திடும்
ஆனந்த லகரிகள் தன்னில் நானும்
ஆழ்ந்திடும் பொழுதுகள் இனிப்பே !

தேடிடும் வாழ்வில் கண்டிடும் மகிழ்ச்சி
தேடாமல் கிடைத்திடும் வேளை
இயற்கையில் நிறைந்திடும் காட்சிகள்
இரந்திடும் வேளைகள் தானென்பேன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading