மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

சக்தி சக்திதாசன்

காற்றோடு கரைந்து செல்ல‌
பனியல்ல வறுமை
நேற்றோடு மறைந்து போகும்
நினைவல்ல பசிக்கொடுமை

கைகளின் தழும்பு சொல்லும்
கண்ணீர்க் கதைகளவை
காயம் பட்ட பாதங்களின்
காரணத்தின் நிகழ்வுகள்

ஏர் பிடித்து நாளெல்லாம்
நாய் பட்ட பாடு பட்டு
சோறின்றி வாடிடும் உள்ளங்கள்
தூங்காத இரவுகள் காணீர்

பாதையோரப் படுக்கைகள்
பகிர்ந்திடும் பல கதைகள்
சோரம் போன பெண்கள்
சோகம் சொல்லும் நேரங்கள்

விடிவொன்று இனி உண்டா ?
வினாவுடன் விடியல்கள்
விழித்திடு என் தோழா
விரைந்து வா பதிலுடன்

சக்தி சக்திதாசன

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading