நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

சக்தி சக்திதாசன்

காற்றோடு கரைந்து செல்ல‌
பனியல்ல வறுமை
நேற்றோடு மறைந்து போகும்
நினைவல்ல பசிக்கொடுமை

கைகளின் தழும்பு சொல்லும்
கண்ணீர்க் கதைகளவை
காயம் பட்ட பாதங்களின்
காரணத்தின் நிகழ்வுகள்

ஏர் பிடித்து நாளெல்லாம்
நாய் பட்ட பாடு பட்டு
சோறின்றி வாடிடும் உள்ளங்கள்
தூங்காத இரவுகள் காணீர்

பாதையோரப் படுக்கைகள்
பகிர்ந்திடும் பல கதைகள்
சோரம் போன பெண்கள்
சோகம் சொல்லும் நேரங்கள்

விடிவொன்று இனி உண்டா ?
வினாவுடன் விடியல்கள்
விழித்திடு என் தோழா
விரைந்து வா பதிலுடன்

சக்தி சக்திதாசன

Nada Mohan
Author: Nada Mohan