மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

சக்தி சக்திதாசன்

சந்தத் தமிழ் தந்திட்ட
சிந்தும் தேன் துளிகள்
விஞ்சும் வகையிலொரு
கொஞ்சும் கவிதை வரும்

அன்னை மடியினிலே நானும்
அன்று தவழ்ந்திடுகையில்
அள்ளிப் பிசைந்த என்
அன்புத் தமிழ் மண்ணின்

வாசம் இன்றும் கமழுது
நேசம் நெஞ்சில் கரை புரளுது
வீசும் தென்றலது தானும்
பேசும் மொழி தமிழென்றாடுது

தேசம் கடந்து சென்றாலும்
வேஷம் பல சுமந்து நின்றாலும்
நீசம் பல கடந்து வந்தாலும் – மொழி
நேசம் மறந்து போவேனோ ?

உருண்ட அகவைகள் பலவாக
திரண்ட அனுபவம் செடியாக
புரண்ட நினைவுகள் சுமையாக
வ்றண்ட நிலையிலும் தமிழ் தேனே 

கருவினில் சுமந்திட்ட அன்னையவள்
சுரந்திட்ட பாலிலும் தமிழோடி
நிறைந்திட்டு எண்ணத்தில் பதிவாகி
பரந்திட்டு சிந்தையில் கவியாக

இயங்கிடும் சுவாசம் இருக்கு மட்டும்
முழங்கிடும் எழுத்துக்கள் தமிழாக
இறந்திட்ட பின்னாலும் தமிழாக
இயற்கையில் தவழ்வேன் தென்றலென

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading