மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

சக்தி சக்திதாசன்

காகிதக் கப்பலொன்று
மெதுவாய் கடலிலே
மிதக்குது பார்

இரவென்னும் திரையினிலே
கனவொன்று தோன்றி
தவழுது பார்

அலையொன்று அடித்ததும்
அக்காகிதக் கப்பல்
அடையாளம் இன்றி
அழிந்திடும் பார்

இரவங்கு விடிந்ததும்
தவழ்ந்திட்ட கனவு
தடயமின்றி எப்படியோ
கலைந்தது பார்

வீட்டு முன் முற்றத்தில்
மழைவெள்ளம் மத்தியில்
பிறக்கின்ற நீர்க்குமிழி
இருக்கின்ற நேரமென்ன ?

காரிருளின் மேனியைச்
சிக்கெனப் பிடித்திருக்கும்
பனிப்புகாரின் வாழ்வு
ஆதவனின் கதிர் வரையே !

பூமிப்பந்தின் ஆயுளின் முன்
பாவமிந்த மனிதன் வெறும்
முற்றத்து நீர்க்குமிழியே !
மறந்து விட்ட மாயமென்ன ?

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading