பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

சக்தி சக்திதாசன்

அம்மா என்றொரு தெய்வம்
அன்பின் அடிப்படைத் தத்துவம்
அகரமாய் வாழ்வின் ஆரம்பம்
ஆண்டவன் என்பதே தாயுள்ளம்

விளக்கின் ஒளியாய் ஒளிர்ந்திடும்
விந்தையை அறிந்தவள் அன்னையே
வியப்பின் வடிவாய் மலர்ந்தவள்
வித்தகப் பெண்ணாய் அன்னையரே !

கண்ணில் ஒருதுளி நீரென்றால்
கசியும் உதிரம் அவள்நெஞ்சில்
தனக்கென எதையும் எடுக்காமல்
தன்னை குழந்தைக்காய் ஈந்திடுவாள்

தாய்மை என்பது ஓர்வரமே !
தாயினம் உலகில் தனியினமே !
பெண்ணாய்ப் பிறந்த அனைவருமே
பூமியில் தாய்மனம் கொண்டவர்களே !

அன்னையர் தினத்தில் மட்டுமல்ல
அனைத்துத் தினமும் தாய்மையினை
போற்றிடும் வகையில் வாழ்ந்திடலாம்
பெண்களைக் கண்ணாய் மதிப்பதனால்

வாழிய ! வாழிய ! தோழியரே !
வாழிய ! வாழிய ! அன்னையரே !
புதியதோர் சமுதாயம் அமைத்திடவே
புதுமைகள் புரிந்தே வென்றிடுக

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading