தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

சக்தி சக்திதாசன்

கவிதைக்கோர் தினமெனில்
கவிதையிலாத் தினமுண்டோ?
கவிதையோடு விழித்திடுவேன்
கவிதையோடு உறங்கிடுவேன்

கவிதையே வாழ்வாகவே
கண்டிட்ட கவிஞனெங்கள்
காவியத் தலைவனென்போம்
கவிதைக்கோர் பாரதியே !

கவித்துவத்தை தன்னகத்தில்
கணக்காகக் விதைத்திட்டவன்
கவியாக்கிக் களித்திட்டோன்
கவியரசர் கண்ணதாசன்

காசினியில் ஓர்தினமின்று
கவிதைக்கு கொடுத்திட்டார்
கவிதைகளாய் சிந்திக்கும்
கவியலைகள் ஆர்ப்பரிக்கும்

கவிதையாக தாய்த்தமிழதுவே
கவிதையில் தவழ்ந்திடும்
கவிதையில் மலர்ந்திடும்
கவிதையாகவே சுரந்திடும்

கவிதைகள் கனத்திடும்
கவிதைகளாய்ப் பொழிந்திடும்
கவிதைகளே தினந்தினம்
களிப்புடனே கவிந்திடும்

உலகத்தோர் அனைவரும்
உணர்வோடு கொண்டாடும்
உலகக் கவிதைத்தினமதில்
உதிர்க்கின்றேன் வாழ்த்துகளை

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    சந்த கவி இலக்கம் _196 சிவாஜினி சிறிதரன் "களவு" பசி பட்டினி பஞ்சத்தால் களவு பாத்திருந்து திருடுபவர் வழித்தெருவில் கொள்ளையடிப்பு! உழைக்க பிழைக்க...

    Continue reading