மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

சக்தி சக்திதாசன்

கவிதைக்கோர் தினமெனில்
கவிதையிலாத் தினமுண்டோ?
கவிதையோடு விழித்திடுவேன்
கவிதையோடு உறங்கிடுவேன்

கவிதையே வாழ்வாகவே
கண்டிட்ட கவிஞனெங்கள்
காவியத் தலைவனென்போம்
கவிதைக்கோர் பாரதியே !

கவித்துவத்தை தன்னகத்தில்
கணக்காகக் விதைத்திட்டவன்
கவியாக்கிக் களித்திட்டோன்
கவியரசர் கண்ணதாசன்

காசினியில் ஓர்தினமின்று
கவிதைக்கு கொடுத்திட்டார்
கவிதைகளாய் சிந்திக்கும்
கவியலைகள் ஆர்ப்பரிக்கும்

கவிதையாக தாய்த்தமிழதுவே
கவிதையில் தவழ்ந்திடும்
கவிதையில் மலர்ந்திடும்
கவிதையாகவே சுரந்திடும்

கவிதைகள் கனத்திடும்
கவிதைகளாய்ப் பொழிந்திடும்
கவிதைகளே தினந்தினம்
களிப்புடனே கவிந்திடும்

உலகத்தோர் அனைவரும்
உணர்வோடு கொண்டாடும்
உலகக் கவிதைத்தினமதில்
உதிர்க்கின்றேன் வாழ்த்துகளை

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading