முதியோரின் புலம்பல் 2169 ஜெயா நடேசன்

தவிக்கிறேன் தவிக்கிறேன் தனிமையில் மூலையில் முடங்கி கிடக்கும் நிலை கண் தெரியாத பாவியாகி விட்டேன் கைப்பிடித்து தெருவில்...

Continue reading

சக்தி சக்திதாசன்

இமைகளின் ஓய்வு
மனிதனின் உறக்கம்
இதயத்தின் ஓய்வு
மரணத்தின் நிகழ்வு

இருக்கின்ற போதினில்
இறக்கின்ற உணர்வுகள்
இறக்கின்ற வேளையில்
இருந்திடும் மாயங்கள்

விரிகின்ற இதழ்களில்
மலர்கின்ற புன்னகை
மாலையின் மலர்களாய்
மடிவதன் மந்திரம்

சுயத்தினை உரித்து
சித்தத்தைப் பிழிந்து
சுரந்திடும் ஞானத்தை
சுவைத்திடும் தருணங்கள்

வாழ்க்கையின் விரல்கள்
வரைந்திடும் கோலங்கள்
விளைந்திடும் சித்திரம்
விசித்திரத் தத்துவம்

நினைவெனும் அலையினில்
மிதந்திடும் கனவுகள்
அறிவின் உதயத்தில்
அழிந்திடும் அனுபவம்

அன்னையின் கருவறையில்
ஆனந்த நீச்சல்கள்
அவனியின் மடியினில்
அவலத்தின் குமுறல்கள்

இருக்கின்ற வரையில்
இல்லாத கருணையோ
இறக்கின்ற போதங்கு
இருப்பது சாத்தியமோ ?

உள்ளத்தின் வாசலில்
எத்தனை உணர்வுகள்
நுழைந்திடும் வழியறியா
நூதன ஜாலங்கள்

சுரந்திடும் வரிகளுள்
புதைந்திடும் கருத்துகள்
புரிந்திட்ட நெஞ்சத்தில்
புவனத்தின் ஞானங்கள்

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading