இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

சக்தி சக்திதாசன்

கட்டாந்தரையை விளைநிலமாக்கி
எட்டாதினியிங்கு பசியெமக்கென
தொட்டதெல்லாம் பொன்னாக்கி
ஈட்டியதவர் ஆற்றல்களென்பேன்

வறுமையில் உழன்றவர்
வாட்டத்தில் வாழ்ந்தாலும்
கல்வியில் சிறந்தவர்களாய்
களவெற்றிகண்டோர் ஆற்றல்களே !

முதலாம்உலகு தாமெனவே
முழங்கிடுவோர் மத்தியில்
மூன்றாம்உலகாய் இருந்து
முதன்மையடைந்தது ஆற்றலே !

எத்தனைமுறை வீழ்ந்தோம்
என்பதல்ல முக்கியமிங்கு
அத்தனைமுறையும் எழுந்தோம்
என்பதவர் ஆற்றல்களே !

ஆற்றலெனும் சக்திகொண்டு
ஆக்கிடும் நம்பிக்கையோடுப்
வாழ்ந்திடுவீர் அன்புச்சோதரரே
வெற்றியன்றி வேறில்லையுமக்கு

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading