பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சக்தி சக்திதாசன்

நாளை என்றொரு ஊரை நோக்கி
இன்று நாம் போகும் பயணம்
நேற்றைய பாதையில் எடுத்த அடிகள்
நெருஞ்சியும், மலர்களும் பரவிய பாதை

சேர்த்திடும் அனுபவம் கொண்டு
ஆக்கிய புத்தகம் ; நிறைந்த
அத்தியாயங்கள் இயம்பிடும்
அறிவுரைகள் ஆயிரமாயிரம்

ஏற்றிய இலட்சிய தீபம் காணும்
காற்றினில் அலைந்திடும் கோலம்
காத்திடும் அணையாமல் அதனை
போற்றிடும் கொள்கை விளக்கங்கள்

கைகளின் தழும்புகள் செப்பிடும்
உழைப்பின் மகிமையை முழுமையாய்
கால்களின் வடுக்கள் கூறிடும்
பயணப்பாதையின் இடர்களை

நூற்றிடும் சேலையின் வர்ணம் போல
அடைந்திடும் வெற்றியின் வர்ணங்கள்
வானவில்லின் வர்ணஜாலம் போல
வந்து மறைந்திடும் நிகழ்வல்ல வாழ்க்கை

போற்றிடு மனிதனாய்ப் பிறந்ததை
காத்திடு மனிதநேயத்தின் பெருமையை
நாட்டிடு ஒன்றே குலம் எனும் வேதத்தை
நலமே விளைந்திடும் நானிலம் எங்கனும்,

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan