அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

சக்தி சக்திதாசன்

நாளை என்றொரு ஊரை நோக்கி
இன்று நாம் போகும் பயணம்
நேற்றைய பாதையில் எடுத்த அடிகள்
நெருஞ்சியும், மலர்களும் பரவிய பாதை

சேர்த்திடும் அனுபவம் கொண்டு
ஆக்கிய புத்தகம் ; நிறைந்த
அத்தியாயங்கள் இயம்பிடும்
அறிவுரைகள் ஆயிரமாயிரம்

ஏற்றிய இலட்சிய தீபம் காணும்
காற்றினில் அலைந்திடும் கோலம்
காத்திடும் அணையாமல் அதனை
போற்றிடும் கொள்கை விளக்கங்கள்

கைகளின் தழும்புகள் செப்பிடும்
உழைப்பின் மகிமையை முழுமையாய்
கால்களின் வடுக்கள் கூறிடும்
பயணப்பாதையின் இடர்களை

நூற்றிடும் சேலையின் வர்ணம் போல
அடைந்திடும் வெற்றியின் வர்ணங்கள்
வானவில்லின் வர்ணஜாலம் போல
வந்து மறைந்திடும் நிகழ்வல்ல வாழ்க்கை

போற்றிடு மனிதனாய்ப் பிறந்ததை
காத்திடு மனிதநேயத்தின் பெருமையை
நாட்டிடு ஒன்றே குலம் எனும் வேதத்தை
நலமே விளைந்திடும் நானிலம் எங்கனும்,

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading