ஆளுகின்றான் அடிபணிகின்றோம்..!!

வியாழன்கவி 2300!! ஆளுகின்றான் அடிபணிகிறோம்!! வாழுகின்ற வாழ்க்கையிலே வழி நெடுக பயணிப்பான் ஆளுகின்ற அழுத்தக்காரன் வீழ்ந்திடுவான் உழைப்பாலே சோம்பலென்று கிடந்தாலோ தூரம்...

Continue reading

வரமாகும் வாய்ப்புக்களே

இரா.விஜயகௌரி வரமாகும் வாய்ப்புக்கள் அவை தடமாகும் செயல் தழுவின் உரமாய் நாம் பயன்கொள்ளின் உரைத்தெழுதும் நம் தடங்கள் வாய்த்ததெல்லாம்...

Continue reading

சக்தி சக்திதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு விருப்பு தலைப்பு

“சிந்தையிலே
விழுந்தது
சின்னதாய் ஒரு பாட்டு

சித்திரமாய்
விரிந்தது
சிதறிய உணர்வுகள்

முத்திரையாய்
பதிந்தது
முத்தமிழின் முழு வர்ணம்

எத்திசையும்
காண்பது
என் நினைவின் நிழல்களே !

கற்றறிந்த
கலையல்ல
கவிதை யாக்கும் கலையது

சுற்றியுள்ள
நிகழ்வுகளே
சுரக்கின்ற வரிகளெல்லாம்

மீட்டுகின்ற
சுரங்களெல்லாம்
சொட்டுகின்ற இசையிது

தட்டுகின்ற
கைகளெல்லாம்
கொட்டுகின்ற ஓசைகளே !

மெட்டெடுத்து
இசைத்திட நான்
மெல்லிசை மன்னனில்லை

கேட்டறிந்த
ஞானமல்லால்
நானறிந்த எதுவுமில்லை

கவிஞனில்லை – நான்
கலைஞனுமில்லை வெறும்
கவியரசர் ரசிகன் மட்டுமே !

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan