28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
சக்தி சக்திதாசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு விருப்பு தலைப்பு
“சிந்தையிலே
விழுந்தது
சின்னதாய் ஒரு பாட்டு
சித்திரமாய்
விரிந்தது
சிதறிய உணர்வுகள்
முத்திரையாய்
பதிந்தது
முத்தமிழின் முழு வர்ணம்
எத்திசையும்
காண்பது
என் நினைவின் நிழல்களே !
கற்றறிந்த
கலையல்ல
கவிதை யாக்கும் கலையது
சுற்றியுள்ள
நிகழ்வுகளே
சுரக்கின்ற வரிகளெல்லாம்
மீட்டுகின்ற
சுரங்களெல்லாம்
சொட்டுகின்ற இசையிது
தட்டுகின்ற
கைகளெல்லாம்
கொட்டுகின்ற ஓசைகளே !
மெட்டெடுத்து
இசைத்திட நான்
மெல்லிசை மன்னனில்லை
கேட்டறிந்த
ஞானமல்லால்
நானறிந்த எதுவுமில்லை
கவிஞனில்லை – நான்
கலைஞனுமில்லை வெறும்
கவியரசர் ரசிகன் மட்டுமே !
சக்தி சக்திதாசன்
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...