பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

சக்தி சக்திதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு விருப்பு தலைப்பு

“சிந்தையிலே
விழுந்தது
சின்னதாய் ஒரு பாட்டு

சித்திரமாய்
விரிந்தது
சிதறிய உணர்வுகள்

முத்திரையாய்
பதிந்தது
முத்தமிழின் முழு வர்ணம்

எத்திசையும்
காண்பது
என் நினைவின் நிழல்களே !

கற்றறிந்த
கலையல்ல
கவிதை யாக்கும் கலையது

சுற்றியுள்ள
நிகழ்வுகளே
சுரக்கின்ற வரிகளெல்லாம்

மீட்டுகின்ற
சுரங்களெல்லாம்
சொட்டுகின்ற இசையிது

தட்டுகின்ற
கைகளெல்லாம்
கொட்டுகின்ற ஓசைகளே !

மெட்டெடுத்து
இசைத்திட நான்
மெல்லிசை மன்னனில்லை

கேட்டறிந்த
ஞானமல்லால்
நானறிந்த எதுவுமில்லை

கவிஞனில்லை – நான்
கலைஞனுமில்லை வெறும்
கவியரசர் ரசிகன் மட்டுமே !

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading