19
Feb
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
19
Feb
சக்தி சக்திதாசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
இதயத்தின் வாசலில்
இடைவிடாத வரவுகள்
இமைப்பொழுது நேரத்தில்
அகன்றுவிடும் நிகழ்வுகள்
சொந்தங்களின் சேர்க்கை
சோகங்களின் சேமிப்பு
சுயமுணரும் வேளையிலே
சுரக்கின்ற ஞானங்கள்
தேடுகின்ற செல்வங்கள்
ஓடுகின்ற வேகங்கள்
தேடாத வேளைகளில்
தேடிவரும் இதயங்கள்
நாடி நிற்கும் ஆதரவு
நகர்ந்துவிடும் காலங்கள்
நினைவுகளின் கொதிப்புகள்
நிகழ்த்துகின்ற வேள்விகள்
சொல்லாத சொற்களுக்குள்
புதைந்திருக்கும் அர்த்தங்கள்
சொல்லிவிடும் போதினிலே
சத்தமில்லா ஸ்வரங்கள்
பாடத பாடலுக்கு நெஞ்சில்
இசைத்திருக்கும் ராகங்கள்
வெளிச்சமில்லா விடியலில்
மலரத்துடிக்கும் தாமரைகள்
கனக்கின்ற இதயத்தில்
கவிதைகளின் கருத்தரிப்பு
தாய்மொழியில் சொல்வதினால்
தாலாட்டும் அக்கணங்கள்
சக்தி சக்திதாசன்
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...