மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

சக்தி சிறினிசங்கர்

வியாழன் கவிதை
உன்னதமே………உன்னதமாய்!
உன்னதமே உன்னதமே என்னதவம் செய்தோம்
இன்னல்கள் பட்டாலும் இல்லறம் நல்லறமாய்
பெண்மையின் சிகரமாய் பெரும்பேறு கண்டோம்
அடுக்களையில் அடங்காமல் அவனியிலே
அற்புதமாய்
துடுப்புகளாய் தூண்களாய் தாங்கியே நிற்கிறோம்
மடமையக் கொளுத்தி மகுடமும் சூடி
தடங்களும் பதித்து தாரகைகளாய் மிளிர்ந்து
தரணியை ஆளும் தரம்வரை உயர்ந்து
உரமாய் இருந்து உழைப்பதில் வல்லவர்
மகளிர் என்றால் மறுப்பது தகுமோ
பகலிரவாய் உழைக்கும் பகலவன் போலிருப்பர்
எட்டுமணி வேலைசெய்யும் ஆணின் துணையாய் இல்லத்தைக்
கட்டியெழுப்பக் கடவுளால் காரிகைகள் படைக்கப்பட்டார்
உன்னதமே உன்னதமே அனைத்துப் பெண்களும் உன்னதரே!
மருமகளாய் மறுவீடு சென்று மற்றுமொரு
அன்னையாக அண்ணியாகி
விருட்சமாய் நிற்கிறேன் வியக்கும்விதம் உன்னதமாய்!

நன்றி வணக்கம்!
கவிதைநேரத் தொகுப்பாளினிகளுக்கும்
திரு.திருமதி. நடா மோகன் அவர்களுக்கும் மிகுந்த நன்றி!

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading