சக்தி சிறினிசங்கர்

வணக்கம்@
ஈரம்
*****
மொழிதனில் இருந்தது தாகம்
வழிவழி வந்தது மோகம்
விழிதனை நிறைக்குது ஈரம்!
நஞ்சினை உண்டவர் வீரம்
நெஞ்சினை நிறைக்குது பாரம்
அஞ்சன விழிகளில் ஈரம்!
விண்தனில் இருந்து வீழ்ந்தது
மண்தனில் ஓடி வழிந்தது
திண்ணைகள் பண்ணைகள் அழிந்தது
எண்ணங்கள் இன்னமும் ஈரம்!
தாய்நாடு வெகு தூரம்
வாய்தனில் ஊறுது காரம்
விழிதனை நிறைக்குது ஈரம்!
மண்தனை இழந்தது பாரம்
கண்களால் கண்டது கோரம்
எண்ணங்கள் காயாத ஈரம்!

நன்றி வணக்கம்!

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading