சக்தி சிறீனிசங்கர்

இனிய இரவு வணக்கம்!
சந்தம் சிந்தும் சந்திப்பு!
கவித்தலைப்பு
விடியல்!
(குறட்டாழிசை)
பகலது தொடரா பரிதியும் மறையும் /
நகருமே நாளும் நாளைய விடியலை/
நோக்கி நமக்குள் நொந்து போகா/
ஊக்கம் வேண்டும் உறுதி வேண்டும்/
காயம் இல்லா காலம் இல்லை
மாயம் ஏதும் மருந்தும் ஆகா/
ஏற்றம் இறக்கம் ஏற்றுக் கொண்டு/
மாற்றம் வேண்டும் மனத்தில் உறுதி/
கொண்டே வாழ்வில் கொள்கை உடனே/
விண்ணைத் தொடவே வீறு நடையும்/
வலிகள் தாங்கி வழியது தேடி/
கலியது நீக்கிக் களிப்புடன் வாழ/
முயற்சி ஒன்றே மூலதனம் ஆகுமே/
பயக்கும் நல்ல பயனும் அன்றோ/
அயற்சி கொள்ளா ஆற்றல் தருமே/
வியக்கத் தக்க விடியல் ஒன்று//

ப.வை.அண்ணா! உங்கள் பணி பாரிய பணி! மிகுந்த வாழ்த்துகள்!
உங்களுடன் சேர்ந்து கவித்திறனாய்வு செய்யும் பாலரவி அவர்களுக்கும் மிகுந்த பாராட்டுகள்!
களம் தந்து உற்சாகப்படுத்தும் நடா மோகன் அவர்களுக்கு மிக்க நன்றி!
தொழில்நுட்பத்தில் உதவிபுரியும் வாணி மோகன் அவர்களுக்கும் மிக்க நன்றி!

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading