இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

சக்தி சிறீனிசங்கர்

இனிய இரவு வணக்கம்!
சந்தம் சிந்தும் சந்திப்பு!
கவித்தலைப்பு
விடியல்!
(குறட்டாழிசை)
பகலது தொடரா பரிதியும் மறையும் /
நகருமே நாளும் நாளைய விடியலை/
நோக்கி நமக்குள் நொந்து போகா/
ஊக்கம் வேண்டும் உறுதி வேண்டும்/
காயம் இல்லா காலம் இல்லை
மாயம் ஏதும் மருந்தும் ஆகா/
ஏற்றம் இறக்கம் ஏற்றுக் கொண்டு/
மாற்றம் வேண்டும் மனத்தில் உறுதி/
கொண்டே வாழ்வில் கொள்கை உடனே/
விண்ணைத் தொடவே வீறு நடையும்/
வலிகள் தாங்கி வழியது தேடி/
கலியது நீக்கிக் களிப்புடன் வாழ/
முயற்சி ஒன்றே மூலதனம் ஆகுமே/
பயக்கும் நல்ல பயனும் அன்றோ/
அயற்சி கொள்ளா ஆற்றல் தருமே/
வியக்கத் தக்க விடியல் ஒன்று//

ப.வை.அண்ணா! உங்கள் பணி பாரிய பணி! மிகுந்த வாழ்த்துகள்!
உங்களுடன் சேர்ந்து கவித்திறனாய்வு செய்யும் பாலரவி அவர்களுக்கும் மிகுந்த பாராட்டுகள்!
களம் தந்து உற்சாகப்படுத்தும் நடா மோகன் அவர்களுக்கு மிக்க நன்றி!
தொழில்நுட்பத்தில் உதவிபுரியும் வாணி மோகன் அவர்களுக்கும் மிக்க நன்றி!

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading