சர்ளா தரன்

வலி சுமந்து சென்ற நாடு
விழி சொரிந்து சென்ற காடு
உயிர் தந்த உடம்பு வெந்தது
புகை கொண்டு கலந்தது காற்று
பகை இன்றி வாழ்ந்தவர்
புகையாக போனதுவோ
கலி உலகம் விட்டு பிரிந்ததேனோ

விழி நிமிர்த்தி பார்க்கையில்
வகை தொகையாய் மக்கள்
வந்து கூடியதும்
தொந்தரவின்றி உன் உயிர் போனதும்
தொண்டனாய் நீர் வாழ்நத கொடை ஐயா

மெல்லிய உடலும்
மென்மையான உன் குரலும்
வல்லினம் இன்றிய உன் வளர்ப்பும்
வாய் பிழக்க வைக்குதப்பா
பந்தைய குதிரையாய் ஓடும் என வாழ்வில்
வெந்த உன் உடம்பு
வேதனையை தருகுதப்பா
வல்லவனான உன் உருவம் காணாது
வலிக்குதப்பா என் இதயம்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading