மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

சர்வேஸ்வரி கதிரித்தம்பி.

ஒளியின்றி ஒளிர்வெங்கு…

ஒளியான தேசமதை இருட்டி வைத்தது யாரோ…
காலத்தின் கண்ணாடி காட்டுமதன் சாயலை…
நிலம் தளம் களமான கதையாதோ….
பேச்சும் வீச்சும் தமிழ் மூச்சின் முடக்கம்…
என்னசொல்ல எதுசெய்ய இன்னுமாக வகையுண்டோ
வழியுண்டோ….
காலம் மாறும் கருத்தும் மாறும்…
காத்திருந்து காத்திருந்து காலத்தின் கோலம் ஞாலத்தில் அவலம்…
ஆக்கிவைத்த கடுமையின் கொடுமையை
எண்ணற்ற பக்கங்களாக
எழுதிய கண்ணீர் கதை புரட்டிய புரட்சிதான் மாறுமா…
வேட்கையும் தாகமும் போராட்ட தீக்குளிப்பும் அடுத்த தலைமுறைக்கான சேமிப்பா….
தொடக்கமும் முடிவும் தவறின் கொடுமை….
அவலங்களான
தேக்கம் ….மீறிப்பாயும் ஊழல்…..
மிரட்டும் கணங்கள்…விரட்டும் ஓலங்கள்…..கரைபுரண்டு முட்டிமோதும் துயர அலைகள்.
…துவளும் உறவுகள்…அழியாத வடுக்கள்…
அணையா தீபங்கள் ….

– சர்வேஸ்வரி கதிரித்தம்பி.

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading