அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

சர்வேஸ்வரி சிவரூபன்

வசந்தம்

வசந்தம் கொட்டும் வண்ண நிலவு
சுகந்தம் வீசிட சோகமும் போகும்
இசைக்கும் வசமாய் இன்ப நாதமாய்
பயக்கும் படியே வசந்தம் வீசிடும்

ஏற்றம் கொண்டதும் ஏறுபோல் நடப்பதும்
மாற்றம் கண்டு மகிழ்வைக் காண்பதும்
தாக்கமின்றி வாழ்வு மலர்வதும்
நோக்கும் செயலும் துலங்க நடந்தால்

வீசும் வீசும் வசந்தம் தானே
காசுபணம் சேர்ந்தாலும் கவலையில்லையே வசந்தம்
மாடி கோபுரம் இருந்தாலும் இடரில்லையே அது வசந்தம்
நல்லகுழந்தைகள் மண்ணிலே மலரும் போது வசந்தம்
வசந்தம் தேடிவரும் நாம் நடக்கும் விதத்தினிலே வசந்தம்
சர்வேஸ்வரி சிவருபன்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading