16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
சாளரத்தின் ஒளியினிலே
சிவதர்சனி இரா
வியாழன் கவி 2029!
சாளரத்தின் ஒளியினிலே..!
கட்டாந்தரையில் குளிரின் மடியில்
விட்டத்தை வெறித்தே பார்த்தபடி
தூங்கிய அந்தக் காலங்களிலெல்லாம்
தூக்கம் அப்படிக் கண்களைத் தழுவின..
பஞ்சு மெத்தையில் பகட்டு வாழ்வில்
துஞ்சுவதற்கே அஞ்சுகின்ற காலம்
நோயென்றும் துயரென்றும் வந்து
நொந்த உடலைக் கொன்றுவிட..
அப்பப்போ சாளரத்தின் வழியே விழி
அப்பப்பா எதைத்தான் தேடுகிறதோ
பட்டுப்போன வாழ்வு துளிர்க்குமா
பட்ட மரங்கள் இலை நிறைக்குமா..
இருளின் பிடி விலக ஒளி புகுமே
அருளும் சாளரமே உன்னூடாய்
எத்தனை காட்சிகள் உள்ளேக
அடைபட்டுக் கிடந்த இதயமும் திறக்கிறதே…!
சிவதர்சனி இராகவன்
19/9/2024

Author: Nada Mohan
17
Oct
-
By
- 0 comments
ஜெயம்
அந்தி நேரம்
அந்தி நேரம் வண்ணம் குழைத்தெடுத்து
கீழ்வானில் அழகான...
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...