மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

சாளரத்தின் ஒளியினிலே

சிவதர்சனி இரா

வியாழன் கவி 2029!

சாளரத்தின் ஒளியினிலே..!

கட்டாந்தரையில் குளிரின் மடியில்
விட்டத்தை வெறித்தே பார்த்தபடி
தூங்கிய அந்தக் காலங்களிலெல்லாம்
தூக்கம் அப்படிக் கண்களைத் தழுவின..

பஞ்சு மெத்தையில் பகட்டு வாழ்வில்
துஞ்சுவதற்கே அஞ்சுகின்ற காலம்
நோயென்றும் துயரென்றும் வந்து
நொந்த உடலைக் கொன்றுவிட..

அப்பப்போ சாளரத்தின் வழியே விழி
அப்பப்பா எதைத்தான் தேடுகிறதோ
பட்டுப்போன வாழ்வு துளிர்க்குமா
பட்ட மரங்கள் இலை நிறைக்குமா..

இருளின் பிடி விலக ஒளி புகுமே
அருளும் சாளரமே உன்னூடாய்
எத்தனை காட்சிகள் உள்ளேக
அடைபட்டுக் கிடந்த இதயமும் திறக்கிறதே…!
சிவதர்சனி இராகவன்
19/9/2024

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading