மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

சிட்டுக்குருவியே!

சிட்டுக்குருவியே!

சின்ன அலகுப் குருவிநீயே
சிந்தை மகிழ வைக்கின்றாய்
பென்னம் பெரிய செயலாலே
பெருமை கூட்டிச் செல்கின்றாய்
இன்பம் தந்த உன்வாழ்க்கை
இதய வானில் சிறக்கிறதே
மென்மை பட்டு இறக்கையாலே
மேன்மை தொட்டுச் செல்கிறாய்

கதிரின் வீச்சு உனையழிக்க
காத்தி ருக்கும் காலமிதோ!
பதியை விட்டுப் பறந்திடவே
பாதை அமைத்து செல்கின்றாய்
வதியும் வாழ்வு வண்ணமாக
வளர்ந்து நீயும் செல்கையில்
கதியும் உனக்கு நேருகிறது
காலம் உன்னை அணைக்கிறது

பட்டு வண்ணச் சிறகாலே
பாதை அமைத்த வாழ்ந்திடுக!
எட்டும் வண்ண பறப்பாலே
என்னைக் கவரும் நல்சிட்டே
கட்டும் உந்தன் கூட்டினிலே
கனிவாய் முட்டை இட்டுநீயும்
துட்டு இல்லா வாழ்கின்றாய்
துணிவாய்ப் பறந்து திரிகிறாய்
நகுலா சிவநாதன் 1754

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading