சிவதர்சனிஇரா

வியாழன் கவி 2259!!

மனிதம் மறந்தவை..

இருப்பாகிக் கிடந்த
பற்பல பண்புகள்
பறந்தே தான் போயின
பண்பட்ட உலகினில்
புண்பட்ட மனத்தை
புரையோடிப்போன வலியை
ஆற்றிட முடியா ஆங்காங்கு..

வாயில்லா சீவன்களும்
வார்த்தை இல்லா திங்கே
உணர்வினில் ஒன்றித்தே
தந்திடும் பாசமதனை
பட்டொளி வீசி எங்கும்
காண்கிறோம் மறுப்பென்ன
ஏமாற்றமும் ஏமாளித்தனமும்
கண்பட்டுப் போனது மனிதரில்
கற்பூரமாய்ப் பற்றினவே..

வற்றிப் போன வடிகால்
விழியெனும் ஆறு குளம்
ஊரெல்லாம் நீரில் மூழ்க
இதுவே துயருண்ட மனம்
எப்படி இலக்கணம் காண
காண்பதை கடந்து போவதை
காரியம் ஆற்றுவதை
ஏற்றே நகரும் நவீன வாழ்க்கை..
சிவதர்சனி இராகவன்
18/12/2025

Author:

செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

Continue reading