வரமாகும் வாய்ப்புகளே 87

வரமாகும் வாய்ப்புகளே 87 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 27-02-2026 வரமாகும் வாய்ப்புகளே -இந்த வாய்ப்பெனும் விதையைப் பயிராக்கி வியர்வையை...

Continue reading

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1803
வளர்ந்த குழந்தைகள் தாமே!

கோடி உயிர்களில் ஒன்றாய்
இப்பூவுலகினில் கருக்
கொண்டே உதிக்க
மாந்த இனத்தில்
மண்போற்ற வாழ்ந்திட
தாய் மடி உதித்து
தமிழ்த் தேன் அருந்தி
தருவாய் விழுதாய்
தந்த வளர்ந்த குழந்தைகள்
தாமே!

விழுந்தாலும் எழுந்து
விருப்போடு பகிர்ந்து
உணர்வோடு அணைத்து
உயர்வான
இவர் சிந்தனை
பிறர் தடுக்க வேண்டாம்
சிறப்பெனக் காண
நமை உயர்த்த வேண்டும்!

பெற்றவர் மகிழ்வில்
பெருமை தங்க
உற்றவர் உராய்வில்
வலியும் எஞ்ச
முடங்காது முரணாகாது
சிந்தை சிறக்க தம்
செயலாற்றும்
வளர்ந்த குழந்தைகள்
தாமே!
சிவதர்சனி இராகவன்
26/4/2023

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் வரலாறு பலபாகம் வழிகூறும் பலகாலம் தமிழ்ப்பள்ளி உருவாக்கம் தரணிக்கே தனிமகுடம் உறவுகள் ஓன்றாகும் உயிர்ப்பு மொழி தமிழாகும் அடுத்த தலைமுறையும்...

    Continue reading

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading