06
Aug
மெல்லென மழைத்துளி
மெல்லென மழைத்துளி மண்ணிலே பொழிந்திட
சில்லென்ற குளிர்வாடை சிந்தனையை மீட்டவும்
எள்ளென்றால் எண்ணை ஆகாது...
30
Jul
நட்பென்றாலே
தங்கசாமி தவக்குமார்
துடுப்பொன்று கிடைத்தது போல வாழ்க்கை பாதையின்
...
30
Jul
நட்பென்றாலே……..
ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026
எங்கிருந்தோ வந்த சொந்தம்
எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம்
இரத்தபந்தம் இல்லாஉறவு
இருளில்...
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி 1803
வளர்ந்த குழந்தைகள் தாமே!
கோடி உயிர்களில் ஒன்றாய்
இப்பூவுலகினில் கருக்
கொண்டே உதிக்க
மாந்த இனத்தில்
மண்போற்ற வாழ்ந்திட
தாய் மடி உதித்து
தமிழ்த் தேன் அருந்தி
தருவாய் விழுதாய்
தந்த வளர்ந்த குழந்தைகள்
தாமே!
விழுந்தாலும் எழுந்து
விருப்போடு பகிர்ந்து
உணர்வோடு அணைத்து
உயர்வான
இவர் சிந்தனை
பிறர் தடுக்க வேண்டாம்
சிறப்பெனக் காண
நமை உயர்த்த வேண்டும்!
பெற்றவர் மகிழ்வில்
பெருமை தங்க
உற்றவர் உராய்வில்
வலியும் எஞ்ச
முடங்காது முரணாகாது
சிந்தை சிறக்க தம்
செயலாற்றும்
வளர்ந்த குழந்தைகள்
தாமே!
சிவதர்சனி இராகவன்
26/4/2023
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...