மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1810!
வெறுமை போக்கும் பசுமை!
வெறுமை போக்கும்
பசுமை -அது
வறுமை போக்கும்
இறைமை
உறையும் பூமி
உயிர்க்க- இறை
வரமாய்ப் பூத்த
நிறைமை!

வியக்க வைக்கும் புதுமை
விழி விருப்பு நல்கும்
பசுமை
உயிர்க்க வைக்கும்
உலகை
உணர்ந்து காத்தல்
கடமை!!

நீரைத் தருதல் குணமே
நிமிர்ந்து நிற்கும் தருவே
சோலை பூக்கும் மணமே
சொர்க்கம் காட்டும்
நற் தாவரமே!

ஓரறிவாய்த் தானிருந்து
ஆறறிவு வாழ வழி நல்கும்
சீராட்டிப் போற்ற நல்
தருணம்
சிலதை நாமும் நடுதல்
உத்தமமே!!

சந்ததி பிழைக்க வேண்டும் –
இங்கு
சரித்திரம் நிலைக்கக்
கூடும்
காடழித்தல் வேண்டாம்
நம் பணியே தாவர நாட்டுகை!!

சிவதர்சனி இராகவன்
10/5/2023

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading