மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1824!

எழுத்தின் வித்தே
பூத்தெழும் தமிழே!

வீழ்தல் என்றும்
உன்றனுக்கில்லை
வீணாய்ப் போதலும்
உன்பணி இல்லை
பேரும் புகழும்
உன்றன் சொத்தாய்
வென்றனை நீயும்
புலம்பெயர் மண்ணில்!

உலகம் வியக்கும்
உணர்வில் சிறக்கும்
செம்மொழி என்றோம்
சீர்படக் கற்றோம்
அடுத்த தலைமுறை
எடுத்துனை ஆள
ஏற்றம் கொண்டு
தமக்குள் ஊன்றத்
தொடுத்தது பாமுகம்
எத்தனை வழிகள்!!

எழுத்தின் வித்தே
பூத்தெழுந்த நாற்றே
வான் தொடும் ஆற்றல்
முடிவிலா ஊற்று நீ
மூச்சினில் கலந்தாய்
முடிவிலி உறைந்தாய்
காலனும் கவர்வான்
நீ மட்டும் சாகா வரம்
பெற்றே வாழ்வாய்
ஆசிகள் தந்தோம்
அழகுடை மொழியே!!
சிவதர்சனி இராகவன்
7/6/2023

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading