தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1838!

“வரப்புயர”..
புலம்பெயர் வாழ்வினிலே புகுந்தவை ஏராளம்
இழந்தவை தாராளம்
இருப்பவை மிகுதியிலே
புதிர்களின் தேரோட்டம்..

வரப்பு உயரவே
விலகுது உறவு நிலை
பெருகுது இடைவெளி
உருகுது அன்பு மனம்
இளகியே நில்லாமல்
இறுக்கமாய் இளையோர் மனம்..!

வரப்புகள் உயர
நீர் வளம் பெருகும்
ஔவை மொழி அன்று
வரப்புகள் இட்டு
சிறப்பினை இழக்கும்
சீரற்ற வாழ்வியல்
மாற்றமாம் இங்கு…!
சிவதர்சனி இராகவன்

Nada Mohan
Author: Nada Mohan