சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1850!

வீணாய்ப் போகும்
பணங்கள்!

கலையை இரசிக்கும்
உள்ளம் அது வரமே
உணர்வில் கலந்த
வண்ண ரகமே
உழைத்துச் சேர்க்கும்
பணத்தில் மிகவே
வீணாய்ப் போகுது
இசை நிகழ்வில் கரைந்தே…!

சினிமா இசையில்
மோகம் நிறைந்து
சிதறியே கூட்டம்
பின்னே போகுது
பணத்தின் மீது
குறியாய் ஒரு சிலர்
கூட்டியே அள்ளிப்
பையிலே போடுறார்..!

விலை ஏற்றம்
அனுமதிச் சீட்டும்
முண்டியடித்து நுழைவும்
இப்படிப் போனால்
என்னாகும் பணமும்
இளைய தலைமுறை
இதனை உணருமோ?…
சிவதர்சனி இராகவன்
16/8/2023

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading