அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1850!

வீணாய்ப் போகும்
பணங்கள்!

கலையை இரசிக்கும்
உள்ளம் அது வரமே
உணர்வில் கலந்த
வண்ண ரகமே
உழைத்துச் சேர்க்கும்
பணத்தில் மிகவே
வீணாய்ப் போகுது
இசை நிகழ்வில் கரைந்தே…!

சினிமா இசையில்
மோகம் நிறைந்து
சிதறியே கூட்டம்
பின்னே போகுது
பணத்தின் மீது
குறியாய் ஒரு சிலர்
கூட்டியே அள்ளிப்
பையிலே போடுறார்..!

விலை ஏற்றம்
அனுமதிச் சீட்டும்
முண்டியடித்து நுழைவும்
இப்படிப் போனால்
என்னாகும் பணமும்
இளைய தலைமுறை
இதனை உணருமோ?…
சிவதர்சனி இராகவன்
16/8/2023

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading