சிவதர்சனி இராகவன்

என்று தீரும்!

தீராத வலியோடு
தீர்ந்து போகும்
இவர் வாழ்க்கை..
நீறாகிப் போனதோ
நீத்தே தான்போனாரோ
அறியாத ஏக்கம்..!

பெற்றவருக்குத் தான்
தெரியும் பிள்ளையின்
பிரிவின் வலி
உற்றவரே உணர்வார்
உறவுகளின் நிர்க்கதி!

விடையற்ற வினாவாக
விளைவு குன்றிய செயலாக
இன்னும் தொடரும்
எல்லையில்லா ஏக்கம்..!

காலங்களை நீட்டியும்
கண்மூடிய போக்கும்
உயிர்களை மதியா அரசும்
வீணாகிப் போகுது தேசமும்..!

யாரால் முடியும்
ஐ நா அன்றி அந்த ஆண்டவன்
அல்லது அதை மீறிய
ஏதேனும் சக்தியுண்டா
சொல்லுவீர் அறியா
எந்தனுக்கு…!
சிவதர்சனி இராகவன்
23/8/2023

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading