இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1893!

கார்த்திகை மலர்விலே…!

புனிதர்களின் நினைவேந்தி
உதிக்கும் திங்கள்
புலரும் காந்தள் மலர்
கைசேரும் எங்கும்
கருமுகில் முகம் தேடி
அலையும் தினம் தினம்
முளைக்கும் விடிவெள்ளி
சொல்லும் மாவீரர் நாமம்…!

நாடு மீட்கும் போரில்
தந்தார் உயிர் விதை
தேடும் உறவுகள் இன்னும்
தேம்பலில் உள வதை
எண்ண முடியாத தியாகம்
இவர் செய்தார்
எங்கள் விடியலுக்காய் கூவிய
வீரக் குயில்கள் இவர்…!
சிவதர்சனி இராகவன்
1/11/2023

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading