சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1901❤️

காலத்தின் மடியில்…!

காலத்தின் மடியில்
வெற்றுக் காகிதங்கள் அல்ல
கவிதைகள் ஆகின்றோம்
கோலத்தின் எழிலில்
முதுமையாய் அல்ல
முயற்சியால் உயருகின்றோம்!

வான்மேக அழுகையின்
வார்ப்புகளால் நனைவோம்
வணங்காது துதி பாடாது
நியாயங்களாய் நிமிர்வோம்
அ நீதிகளின் அகத்தினில்
ஆட்படாது நியாயமாவோம்…!

கண்களைத் திறந்தே காணும்
கனவுகள் அல்ல இவை
இலக்கு ஒன்றின் தொடுகை
கலக்கம் தவிர்த்துக்
காவியங்களாவோம் நாம்…!
சிவதர்சனி இராகவன்
16/11/2023

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading