ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1901❤️

காலத்தின் மடியில்…!

காலத்தின் மடியில்
வெற்றுக் காகிதங்கள் அல்ல
கவிதைகள் ஆகின்றோம்
கோலத்தின் எழிலில்
முதுமையாய் அல்ல
முயற்சியால் உயருகின்றோம்!

வான்மேக அழுகையின்
வார்ப்புகளால் நனைவோம்
வணங்காது துதி பாடாது
நியாயங்களாய் நிமிர்வோம்
அ நீதிகளின் அகத்தினில்
ஆட்படாது நியாயமாவோம்…!

கண்களைத் திறந்தே காணும்
கனவுகள் அல்ல இவை
இலக்கு ஒன்றின் தொடுகை
கலக்கம் தவிர்த்துக்
காவியங்களாவோம் நாம்…!
சிவதர்சனி இராகவன்
16/11/2023

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

    Continue reading