மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1907!

மனிதத்தின் நேயமே…!

இனிதென வாய்த்த புவியிடை
வாழ்வினில் என்றுமே
புனிதமாய் வாழ்ந்திட வாய்த்த
வரமே மனித நேயம்
உயிர்களை உயர்வாய் உன்னத
நிலையாய் எண்ணி
உறவென மேவிட வேண்டுமே
நம்மிடை மனித நேயம்…

அன்னை தெரேசா போன்றதொரு
அகிலத்தின் தாய்மை
பின்னைப் பிறவியிலும் நின்றே
நிலைத்திட வைக்கும்
இன்னொரு பிறப்பு இனியும்
வேண்டாம் மனிதா மனிதம்
அன்பொடு காத்து அரவணைக்க
வேண்டுவது மனிதத்தின் நேயமே..
சிவதர்சனி இராகவன்
7/12/2023

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading