இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1930..

காதலின் வீதியில்

பூக்களும் புன்னகையும்
பாக்களும் பலகவியும்
தேக்கமாய்த் தேனதாய்த்
தாவியே பலர் மனத்தில்
ஊக்கமாய் உணர்வுமாய்த்
தாக்கமாய்த் தவிப்புமாய்ப்
பூக்குமே காதலின் வீதியில்..

கண்டவரும் கொண்டவரும்
கலந்தவரும் பகிர்ந்தவரும்
சேர்ந்தவரும் பிரிந்தவரும்
செந்தணலாய்த் தகித்தவரும்
வாழ்ந்தவரும் வரலாறானவரும்
ஈந்தவரும் இறுமாந்தவரும்
இணைந்தவரும் கலந்தவரும்
கரைந்தவரும் காதலின் வீதியில்..
சிவதர்சனி இராகவன்
8/2/2024

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading