மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1780!

ஆகா! வியப்பில் விழிகள்!

அம்மாவா அக்காவா
அத்தனை பேரும்
அவா பட்டு வினவ
அத்தனை பூரிப்பு
அந்தத் தாய்க்குள்!

ஈரெட்டு வயதில்
இணைத்த இல்லறம்
இரு ஆண்டுகளுக்கு
ஒன்றாய் ஈன்ற மகவுகள்
தலைச்சாண் பையன்
தொடர்ந்த தைந்தும்
பெண்கள்!!

அம்மாவின் ஆடைக்கும்
அலங்காரப் பொருளுக்கும்
நகை
நட்டுக்கும் போட்டியாய்
பஞ்சானும் குஞ்சுமாய்
பிள்ளைகள்!!

இடையே காலன்
கவர்ந்த கணவனின் பிரிவு
தனை நிமிர்த்தித்
தன் காலில் நின்று
கரையேற்றி இன்றும்
கனடா தேசத்தில்
தன்கையே தனக்குதவி
என்றே வாழும் என்
அம்மா!!
ஆகா என் அதிசயம்
வியப்பில் விழிகள்
விரிந்தன வரிகள்!!
சிவதர்சனி இராகவன்
15/3/2023

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading