இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1787!

கரையும் தண்ணீரில்
நிறையும் கழிவுகள்!

நீரும் வேண்டும்
வாழ்வின் தேட்டத்துக்கு
விளையும் பயிருக்கு
வானமுதம் நீராகும்
நீரைப் பேணி
அளவாய் அனுபவிக்க
உலகின் தேவையும்
உவப்பாய் நிறையும்!

உழைத்துச் சேர்க்கும்
பணத்தில் பாதி
உதவாது போதல்
என்ன நியதி
குப்பை தேங்கி
குவலயம் அழியும்
நிலையே நாளை
நிலைப்பது காண்போம்!!

கரையும் நீரைக்
கவனமாய்க் காத்து
நிறையும் கழிவை
நித்தம் குறைக்க
நன்மை கிட்டும்
நலவாழ்வு கைக்கெட்டும்!!
சிவதர்சனி இராகவன்
29/3/2023

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading