18
Jun
தங்கசாமி தவக்குமார்
ஆரோக்கிய வலுவும்
ஆசனங்களும் '
ஆரோக்கிய வலு நிறைந்த தேகமே...
18
Jun
ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்
ஆரோக்கிய வலுவும்
ஆசனங்களும் ''
ஆரோக்கிய வலு நிறைந்த தேகமே
பொருள் பொதிந்த...
18
Jun
ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்
கவிதை 805
உடலை வளைத்தாலே வலிமை பெறும்
உள்ளமும் வளர்ந்து தெளிவு பெறும்...
சிவதர்சனி
வியாழன் கவி 1584!
ஓய்ந்து போகும் மனம்!!
ஓயாத அலைகள் போல என்றும்
எண்ணத்தின் சிதறல் இங்கே
ஓய்வொழிச்சல் இல்லாத் தன்மை
ஒரு நாள் ஓய்ந்து போகுமே!!
வாயாடி என்றே வரலாறு கண்டு
வரன்முறை தாண்டிப் பேசிய நாவு
வஞ்சம் இன்றிப் பஞ்சம் கொண்டு
கஞ்சத் தனம் காட்டுமே அமைதியாய்
துருதுரு வென்றே பார்த்த விழிகள்
தூண்டில் போட்டு இழுத்த நொடிகள்
தூர்வாராக் கிணறு போல் இருளும்
துன்பத்தை வாழ்வில் உணரும்!!
வீதிகள் எங்கும் தடங்கள் பதித்து
வீறு நடை போட்ட கால்கள்
சோர்வு கண்டு சோம்பிக் கிடக்கும்
சந்தடி யின்றித் தவித்து நிற்கும்!!
சிவதர்சனி இராகவன்
24/2/2022
Author: Nada Mohan
19
Jun
“மதிமகன்”
வெற்றி”(359)
எட்டி எட்டிப் பார்க்கும்
எதிரிலும் வந்தும் நிற்கும்
கட்டி அணைக்க போக…
கண்ணாம் பூச்சி காட்டும்!
கிட்டுதென...
19
Jun
சிவரூபன் சர்வேஸ்வரி
செந்தூரப்பூவே
ஃஃஃஃஃஃஃஃஃஃஃ
செந்தூரப்பூவே செங்காந்தள் விழியே வருவாயே//
மந்தாரம் கொட்டும் மாசில்லாத வீணையிலே//
ஒய்யாரமாக ...
19
Jun
ஜெயா நடேசன்
வெற்றி
வெற்றி என்பது இடைவிடா முயற்சி
பரீட்சையில் சித்தி அறிவு...