கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

சிவதர்சனி

வியாழன் கவி 1584!

ஓய்ந்து போகும் மனம்!!

ஓயாத அலைகள் போல என்றும்
எண்ணத்தின் சிதறல் இங்கே
ஓய்வொழிச்சல் இல்லாத் தன்மை
ஒரு நாள் ஓய்ந்து போகுமே!!

வாயாடி என்றே வரலாறு கண்டு
வரன்முறை தாண்டிப் பேசிய நாவு
வஞ்சம் இன்றிப் பஞ்சம் கொண்டு
கஞ்சத் தனம் காட்டுமே அமைதியாய்

துருதுரு வென்றே பார்த்த விழிகள்
தூண்டில் போட்டு இழுத்த நொடிகள்
தூர்வாராக் கிணறு போல் இருளும்
துன்பத்தை வாழ்வில் உணரும்!!

வீதிகள் எங்கும் தடங்கள் பதித்து
வீறு நடை போட்ட கால்கள்
சோர்வு கண்டு சோம்பிக் கிடக்கும்
சந்தடி யின்றித் தவித்து நிற்கும்!!
சிவதர்சனி இராகவன்
24/2/2022

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading