பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

சிவதர்சனி

வியாழன் கவி 1593!

உன்னதமே உன்னதமாய்!!
உயிர்ப்பினைத் தரும் உன்னதமே
தாய்மை
உணர்வினில் கலந்த அற்புதமே
அதன் மேன்மை
படைத்தலின் பணி சுமந்த பாரின்
தண்மை
தடைகள் தகர்த்தெறியும் உயர்வின்
மேன்மை!!

அன்பும் அறமும் கொடையும் கோட்பாடுகளும்
முன் சென்று முடிக்கும் முயற்சியாய்
வெடிக்கும் நாளும்
பன்முக ஆளுமை தன்னிகரில்லாத்
தோழமை
யாவிலும் உன்னதம் உயர்வு தன்னலம் மறந்த சிறப்பு!!

உன்னதமே நம் கண்முன்னே நடமாடும் தாயாய்
உறவாடி மகிழும் மகவாய் சோதரியாய் சொந்தமாய்
மருத்துவராய்த் தாதியயாய்த் தாங்கும் பாத்திரங்கள்
மகத்துவம் சுமந்த மாதுக்கள் மாந்தர்கள் பெண்ணிலைகள்!!

துரும்பெனக் கிடைக்கும் எதனையும் பற்றித்
துடுப்பென பற்றித் துணிவையும் கொண்டால்
பெற்றிடும் வெற்றி பெருமையும் சாற்றி
சரிதத்தில் பக்கங்களை அழகுறச் சொந்தமாக்குவோம்!!
சிவதர்சனி இராகவன்
10/3/2022

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading