பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

சிவதர்சனி

வியாழன் கவி 1593!

உன்னதமே உன்னதமாய்!!
உயிர்ப்பினைத் தரும் உன்னதமே
தாய்மை
உணர்வினில் கலந்த அற்புதமே
அதன் மேன்மை
படைத்தலின் பணி சுமந்த பாரின்
தண்மை
தடைகள் தகர்த்தெறியும் உயர்வின்
மேன்மை!!

அன்பும் அறமும் கொடையும் கோட்பாடுகளும்
முன் சென்று முடிக்கும் முயற்சியாய்
வெடிக்கும் நாளும்
பன்முக ஆளுமை தன்னிகரில்லாத்
தோழமை
யாவிலும் உன்னதம் உயர்வு தன்னலம் மறந்த சிறப்பு!!

உன்னதமே நம் கண்முன்னே நடமாடும் தாயாய்
உறவாடி மகிழும் மகவாய் சோதரியாய் சொந்தமாய்
மருத்துவராய்த் தாதியயாய்த் தாங்கும் பாத்திரங்கள்
மகத்துவம் சுமந்த மாதுக்கள் மாந்தர்கள் பெண்ணிலைகள்!!

துரும்பெனக் கிடைக்கும் எதனையும் பற்றித்
துடுப்பென பற்றித் துணிவையும் கொண்டால்
பெற்றிடும் வெற்றி பெருமையும் சாற்றி
சரிதத்தில் பக்கங்களை அழகுறச் சொந்தமாக்குவோம்!!
சிவதர்சனி இராகவன்
10/3/2022

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

    Continue reading