சிவதர்சனி

வியாழன் கவி 1658!
கோடை மழை!
இடியொடு மழையும் இனித்தது இங்கே
இரங்கியே வானது தந்தது நீரை
இறைத்திடும் நீரும் இறங்கியே வந்து
விரட்டிய வெம்மை விலகியே ஓட!

கோடையில் கொட்டும் மழைக்கு மகிமை
வாடிய பயிர்களும் துளிர்த்தது மேன்மை
அடங்காப் பசியென மண்ணின்
உணர்வு
உணர்ந்தே கிடைத்தது உளத்தில்
நிலைத்தது!

இடியும் மின்னலும் இணைந்த ஆற்றல்
விடியும் பொழுதினில் துளியின் தூறல்
இயற்கை தந்த இனிய பொழுது
இதற்கு இணையாய் எதுவோ உயர்வு!
சிவதர்சனி இராகவன்
21/7/2022

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

    Continue reading