18
Dec
நேவிஸ் பிலிப்
வானில் புது வெள்ளி தோன்றி
சேதி ஒன்று சொன்னது
வானவராம் தேவ மைந்தன்
மண்ணகத்தில் பிறந்தாரம்
பாதையோர...
18
Dec
விசைத்தறி இவளோ……….
-
By
- 0 comments
இரா.விஜயகௌரி
நெய்து நெயது நெய்தே தொடர்ந்து
கொய்து கொய்து குறுகிய கைகள்
எத்தனை விசையுடன் தொடர்ந்தன பொழுதுகள்
அத்தனை...
18
Dec
” தமிழின் ஞாயிறு “
-
By
- 0 comments
ரஜனி அன்ரன் (B.A) " தமிழின் ஞாயிறு " 18.12.2025
நல்லூர்தந்த ஞானச்சுடர்...
சிவதர்சனி
வியாழன் கவி 1678
தேடும் விழிகளுக்குள் தேங்கிய வலி!
ஒன்றல்ல இரண்டல்ல
ஓராயிரம் தாண்டி ஈராயிரமாய்
நாட்களை எண்ணியே கடக்க
எத்தனை கோடி வலி இங்கே!
இருப்புக்களை உறுதிப்படுத்தாது
உணர்வுகளைப் பொருட்படுத்தாது
உயிர் வலி உணராது இன்னும்
உறவுகளை அலைக்கழிக்க!
இன்னும் எத்தனை நாட்கள்
எத்தனை யுகங்கள் வேண்டுமோ
தேடியவரும் இல்லாது போக
தேடப்பட்டவரும் தொடர்கதையாக!
இதுவா வாழ்வியல் நீதி நெறி
இதுவா மானிட தர்மம்
எய்தவர் இருக்க அம்பை நோவதா
ஈட்டிகளாய் வலி தேக்கம் காண்பதா!
நீர் வற்றிய விழிகளும்
குருதி வழிந்தே உலர்ந்த இதயமும்
காய்த்துப்போன பாதங்களும்
விதியானதோ எம் உறவுகளுக்கு!
இன்றே செய் அதை நன்றே செய்
இன்னும் தண்டிப்புகள் வேண்டாம்
ஆதரவாய் எம் கரமும் நீளும்
உறவுகளுக்காய் உணர்வோடு
நீதி கேட்போம்!!
நன்றி
Author: Nada Mohan
21
Dec
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
பருவக் காலப் பாதிப்பிலே
பங்கு கண்டு பொங்குவாய்
உருவக் கோலச் சாதிப்பிலே
முங்கியபடியே மொங்குவாய்
கரும வினை...
20
Dec
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன்
சந்தகவி இலக்கம் _216
"பொங்குவாய்"
தை திங்கள் வந்ததடி தோழி
தரணிமெல்ல மகிழ்ந்தடி
ஆதவனார் வந்தாரடி!
பொங்கலிட்டோம்
பூஜை...
19
Dec
-
By
- 0 comments
அநீதியை எதிர்த்திங்கு பொங்குவாய்
நீதியின் பக்கம் தங்குவாய்
மெய்யுரைக்காது பல வாய்
பொய்யை...