சிவரஞ்சினி கலைசெல்வன்

“மூண்ட தீ” ச.சி.சந்திப்பு 225
பித்துப்பிடித்த இவர்
செத்துப் போட்டுமென
சுற்றத்தார் தந்த
நஞ்சு அப்பம்
உண்ணாமல் பட்டினத்தார்
உரை சொல்லி
ஓட்டில் இட்டார்
வீடெரிந்து நாசமான சேதி
ஊரறிய இன்றுமது
உள்ளதுவே சைவத்தில்
ஞானத்தின் தவ நிலைக்கு
சான்றார்
மூட்டாமல் மூண்ட தீயின்
ஓட்டோடு அருள் பாய்ந்து
காட்டிவிட்ட அதிசயத்தின்
சான்றாய்.
தன் அப்பம்
தன்னை சுடும்
ஓட்டப்பம்
வீட்டைச்சுடும்.
முக்கண்ணன் சிவனாரின்
நெற்றிக்கண்ணில்
மூண்ட பொறி
பற்றியதால் தமிழ்சங்க
நக்கீரன் பேர் இன்றும் பாடம்
நம் சைவ புகழான வேதம்.
ஆறு பொறி பாய்ந்ததினல்
ஆறு பிள்ளை தடாகத்தில்
பார்வதியாள் அணைப்பில்
ஒன்று ஆகி
ஆறுமுக பெருமானாய் ஆகி.
தீ மூண்டு தீமை இல்லை
தீர்க்கும் அது தீமையினை
பாடங்கள் பல உண்டு
பாரில்.எண்ணி
பார்த்தாலே தெரியும்
ஈழப்போரில்
ஆக்கம்
சிவரஞ்சினி கலைசெல்வன்

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 220 "நிலா முற்றம்" இரவின் மடியில் அமர்ந்து இருப்பாய் மேகங்களை ஆடையாக அணிபவனே பூமிக்கு குளிர்ச்சி தரும்...

    Continue reading