வரமாகும் வாய்ப்புகளே 87

வரமாகும் வாய்ப்புகளே 87 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 27-02-2026 வரமாகும் வாய்ப்புகளே -இந்த வாய்ப்பெனும் விதையைப் பயிராக்கி வியர்வையை...

Continue reading

சிவரஞ்சினி கலைச்செல்வன்

சந்தம் சிந்தும் சந்திப்பு 253
பிள்ளை கனி அமுது

பிள்ளை கனி இல்லை என்று
புலம்பி ஆச்சி
உள்ள கோயில் குளம் எல்லாம்
செய்தா நேர்த்தி
எல்லையிலே றோட்டோர அரசை சுற்றி
இடுப்பு நோக 108
குட நீர் ஊத்தி
எத்தனையோ பிள்ளை
பிறந்து சாக
என்னையும் என் தம்பியையும்
காத்தேன் என்பாள்.

பிள்ளை இல்லா குறை பெரிது
விசேடம் என்றால்
பெரிதாக மதிகார் சொந்த காரர் கூட
தள்ளி வைப்பார் சபையில்
சகுன பிழை என்பார்கள்
தனக்குத்தான் பின் சொத்து என்று ஆள் ஆள்
சொந்தம் எல்லாம் அடிபடுங்கள்
என்ற குறை இருந்தாலும் பிள்ளை ஒன்றை
எடுத்தேனும் வளர்க்கோணும்
இல்லை என்றால்
பின்னடியில் நோய் துன்பம் சாவு வந்தால்
பிணம் நாறி புழு சிந்தும் நிலை உண்டாகும் என்பது என் ஆச்சி சொன்ன வேத வாக்கு
எத்தனை பேர் படும்பாடு
தெரியும் தானே.
சிவரஞ்சினி கலைச்செல்வன்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் வரலாறு பலபாகம் வழிகூறும் பலகாலம் தமிழ்ப்பள்ளி உருவாக்கம் தரணிக்கே தனிமகுடம் உறவுகள் ஓன்றாகும் உயிர்ப்பு மொழி தமிழாகும் அடுத்த தலைமுறையும்...

    Continue reading

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading