சிவருபன் சர்வேஸ்வரி

இப்போ தெல்லாம்
************************

இப்போதெல்லாம் இனிமையான காலமும் மலருமே

அப்போதெல்லாம் நல்ல காரியமும் நடக்குமே
தப்பேதுமில்லாமல் தரணியும் சிறந்து நிற்கட்டுமே

நிற்போம் நாளும் நல்லறத்தின் வழியிலே

எங்கும் எப்போதும் எதிலுமே வெற்றியும்

தங்கும் பொங்கும் விளங்கும் நன்னாளாய்

சிந்தும் பைரவியாய் இசைத்திடும் எண்ணங்கள்
முந்தும் படைப்புக்கள் முழுமையாக நிறைவேறட்டும்

எடுத்தியம்பும் எண்ணங்கள் எல்லாம்
அடுத்தும் தொடுத்தும் அறநெறி காணட்டும்
மடக்கும் எண்ணம் யாரிடமும் வேண்டாம்

படைக்கும் மக்களின் உள்ளங்கள் வாழட்டும்
துலங்கும் காலத்தில் துன்பங்கள் நீங்கட்டும்

இலங்கும் இசைகளும் இன்னாட்டில் பரவட்டும்

விளங்கும் நிலையில் மக்கள் புரியட்டும்
கலக்கமில்லை இப்போதே தெரிந்துமே மகிழட்டும்

கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading