மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

சிவருபன் சர்வேஸ்வரி

ஈசன் தந்தான் சரிபாகம்

மண்ணும்குளிர விண்ணும்குளிர
மாதவம் செய்தாய் பெண்ணே நீயும்
கண்ணும்குளிரக் கருத்தும்குளிர
காரணமானவள் நீதானே

பொன்னும் குவியப் பொருளும் நிறைய
புதுமைகள் பொங்கிட நின்றாயே
பண்ணும்இசைத்துப் பாடல் பாடவும்
பாவையுந்தன் புகழ்தானே

வளைகரம் கொண்டாய் விளைநிலமானாய்
குடியிருந்த கோயிலென்பார் கும்பிட்டுன்னை வணங்கி நிற்பார்

பூமிமாதவென்றுண்ணைப் புகழ்விளங்கப் பாடிக்கொள்வார்
பாரதம் துலங்கடவே நாயகி நீயானாய்
கங்காதேவியென்று உன்னைக் கைகூப்பி தொழுதிடுவார்

பெண்ணவள் என்றும் பெருமை சேர்க்கும் பொக்கிசமே
எங்கும் எதிலுமே உனது இயக்கம் ஈசன் தந்தான் சரிபாகம்

-சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading