சிவரூபன் சர்வேஸ்வரி

என் பஞ்சம் மாறிப் போகவில்லை

கானம் பாடம் குருவியொன்று
கூட்டில் இருந்து கூவுகின்றதே
பாட்டுப் பாடும் பாவையொருத்தீ-
வீட்டிலே சிறையாய் இருக்கின்றாள்

கோட்டைத் தாண்ட முடியாமல்
கோதையவளும் வாழ்கின்றாள்.
காலம் செய்த கோலமென்று- அவள்
கனவு கண்டு விழிக்கின்றாள்

மலரும் மங்கையும் சரி பாதி -நீ
மனசை வைத்து அதை யோசி
நிலவும் காயும் ஒரு நாளில்
நீல வண்டும் உறங்கும் நிமிடத்திலே

தாழ்வு கொண்ட குடும்பத்திலே- அவள்
தலைமகளாய் பிறந்ததாலே
தரிக்க வைத்தார் என்னையுமோ -என்
கூட கலைவது எப்போது?

சீதனமென்னும் கொடுமையினால்
சிறையிலிருந்து வாடுகின்றேன் -என்
பருவம் மாறப் போகின்றது- என்
பஞ்சம் மாறப்போவதில்லை

கவிஞர்…
சிவரூபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading