பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

என் பஞ்சம் மாறிப் போகவில்லை

கானம் பாடம் குருவியொன்று
கூட்டில் இருந்து கூவுகின்றதே
பாட்டுப் பாடும் பாவையொருத்தீ-
வீட்டிலே சிறையாய் இருக்கின்றாள்

கோட்டைத் தாண்ட முடியாமல்
கோதையவளும் வாழ்கின்றாள்.
காலம் செய்த கோலமென்று- அவள்
கனவு கண்டு விழிக்கின்றாள்

மலரும் மங்கையும் சரி பாதி -நீ
மனசை வைத்து அதை யோசி
நிலவும் காயும் ஒரு நாளில்
நீல வண்டும் உறங்கும் நிமிடத்திலே

தாழ்வு கொண்ட குடும்பத்திலே- அவள்
தலைமகளாய் பிறந்ததாலே
தரிக்க வைத்தார் என்னையுமோ -என்
கூட கலைவது எப்போது?

சீதனமென்னும் கொடுமையினால்
சிறையிலிருந்து வாடுகின்றேன் -என்
பருவம் மாறப் போகின்றது- என்
பஞ்சம் மாறப்போவதில்லை

கவிஞர்…
சிவரூபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading