அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

அகதி நாம்பெற்ற வரமா

அற நலவுருவெடுத்து – நாம்
அவனியிலே பிறந்து வளர்ந்தும்
நிலமதிர நிற்கவைக்கும்-அகதி
எனும் நிலை தானே

தெளிந்த நல் நிலவு போன்று
தேன்பாயுமருவி போன்று
விளைந்த நல் மணிகள் போன்று
முதிர்ந்த நிலை வந்தாலும்
அகதியென்று
அங்காடி போல் வந்து நிற்கும்

ஒன்றைப் பெறவேண்டுமென
ஒன்றையிழந்து நிற்கையில்
அகதி என்ற பெயருடன்
அலைபாய்ந்து நின்றிடுவோம்
அன்று இட்ட சாபம்-இன்று
இன்று பெற்றோம் வரமாய்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading