தன்னம்பிக்கை 82

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 22-01-2026 சுற்றியிருக்கும் இருள் சூறையாட நினைத்தால் துணிவெனும் தீச்சுவாலை கொழுந்து விட்டெரியட்டும்! விழுந்தால் எழுவாய் விதிதனை வெல்வாய் விடியும்...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

பெற்றவரே உலகமாதா
பேர் விளங்க வைக்கும் குலமாதா
கற்றவரும், நற்றவரும், மற்றவரும்
போடற்றி நிற்க
கருவறையில் நமைச்சு சுமந்து
கருணை மாதா

அமுத முலை தான்னூட்டி
அன்புடன் சீராட்டி
அறப்மோங்க நடைபயில
பெற்றவரே வழிகாட்டி
கல்வியெனும் படகேறி
காலமதில் வென்று வர
கடமையுடன் விழித்து நிற்கும்
பெற்றவரே தெய்வமப்பா

சான்றோராய் நாம் மிளிர -அவர்
சகிப்பது எத்தனையோ
சோதனைகள் பல கோடி சுமந்து நின்று
நம்மை சாதிக்க வைப்பதற்கு
தம் வேதனையை தாம் மறந்து

வெற்றி நடை தான் போட்டு தட்டியெமைக் கொடுப்பார்
வட்டில் சோறு தான் மறப்பார்
வாரி அமைத்தான் அனைத்து முத்த மழை பொழியும்,
பெற்றவரே தெய்வம்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

    Continue reading