சிவரூபன். சர்வேஸ்வரி

பகலவன்
&&&&&&&&&&

பகலவன் ஒளிபோன்று கண்ணே நீவளர்வாய்
பாருக்கு தலைமகனாய் பணிந்தே நீசிறப்பாய்
படித்தும் வரவேண்டும் பக்குவமாய் நீவாழ்வாய்
வடித்துவைத்தாள் அன்னை வண்ணமகனே கேட்டிடுவாய்

அறநெறி கற்று ஆன்மீக ம் நீவளர்ப்பாய்
அன்புடனே நீவிளங்கி ஆற்றலுடன் நீமிளிர்வாய்
கனிந்த நற்நோக்குடனே காலத்தில் நீநிற்பாய்
இனியும் கவலையில்லை இமயமாய் நீ உயர்வாய்
பனித்துளி அகன்றுவிடும் பாசமும் அகலாது
மழைத்துளி மண்ணிற்கு மகிமையை கொடுத்து நிற்கும்
இனிக்கப் பாடிநின்றேன் என்மகனே கதிரொளி நீதானே

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading